தஞ்சாவூர் விளார் சாலையில் அமைந்துள்ள முள்ளி வாய்க்கால் முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தர் முது முனைவர் வா.அய் சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி இன்று 26/7/26 காலை 10 மணிக்கு தொடங்கியது.
விழாவிற்கு தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் துறை மேனாள் பேராசிரியர் முனைவர் கி.அரங்கன் தலைமை வகித்தார். பேராசிரியர் வி பாரி வரவேற்புரை நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கிற்கு தமிழ் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் கி.கருணாகரன் தலைமை வகித்து பேராசிரியர் சுப்பிரமணியம் கட்டமைத்த நிறுவனங்கள் என்ற என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கருத்தரங்கத்தை தமிழ் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.ராஜேந்திரன் ‘நான் அறிந்த பேராசிரியர் சுப்பிரமணியம்’ என்ற தலைப்பில் தொடக்க உரை யாற்றினார். இதைத் தொடர்ந்து
- தமிழ் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் கோ. பாலசுப்பிர மணியம் திராவிட பல்கலைக்கழக உருவாக்கம் என்ற தலைப்பிலும்,
- ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் முனைவர் கி. நாச்சிமுத்து இலக்கண ஆய்வுகள் என்ற தலைப்பிலும்,
- தமிழகத் தொல்லியல் துறை மேனாள் துணை இயக்குனர் முனைவர் மா.பூங்குன்றன் தமிழ் பல்கலைக்கழகம் கல்வெட்டு ஆய்வுகள் என்ற தலைப்பிலும்,
- கேரள பல்கலைக்கழகம் தமிழ் துறை பேராசிரியர் மற்றும் இயக்குனர் கேரளா பல்கலைக்கழக தமிழ் துறை ஆய்வுகள் என்ற தலைப்பிலும்,
- பழங்குடி ஆய்வு மையம் மேனாள் இயக்குனர் முனைவர் சி. மகேஸ்வரன் திராவிட கலைக் களஞ்சியம் பழங்குடி பண்பாடு மொழி என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
பிற்பகல் நடைபெற்ற இரண்டாம் அமர்வில் திராவிட கருத்து மரபு என்ற தலைப்பில் சென்னை பல்கலைக்கழக மேனாள் தமிழ் பேராசிரியர் முனைவர் வீ. அரசு தலைமையேற்று உரையாற்றினார். சங்க இலக்கிய ஆய்வு என்ற தலைப்பில் தமிழ் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் பெ.இராமலிங் கம் தொடக்க உரையாற்றினார்.
- அகராதியில் ஆய்வுகள் என்ற தலைப்பில் மொழி நிறுவன இயக்குனர் முனைவர் பா.இரா. சுப்பிரமணியம்,
- தூய தமிழ் அகராதியில் என்ற தலைப்பில் தமிழ் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் ப.அருளியார்,
- அகராதி இயல் என்ற தலைப்பில் சொற்பிறப்பியல் அகரமுதலி பதிப்பாசிரியர் முனைவர் இரா.கு. ஆல்துரை,
- தமிழ் பல்கலைக்கழக நிர்வாக திறன் என்ற தலைப்பில் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தரின் மேனாள் நேர்முக உதவியாளர் தஞ்சாவூர் கவிராயர்,
- மருத்துவத் தமிழ் என்ற தலைப்பில் மேனாள் மருத்துவ பல்கலை சிறப்பு நிலை பேராசிரியர் மருத்துவர் சுநரேந்திரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
பின்னர் நடைபெற்ற பொது அரங்கத்திற்கு ந.மு.தமிழ்மணி தலைமை வகித்தார். சு.பழனிராஜன், துரை. குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செ.ப.முத்தமிழ் மணி தொடக்க உரையாற்றினார்.
நிகழ்வில் கருத்துரையாக உணர்ச்சி பாவலர் காசி.ஆனந்தன், வழக்கறிஞர் த.பானுமதி, பொன். வைத்தியநாதன், த.மணி வண்ணன் அய்யனாபுரம் சி.முருகேசன், சா.இராமன், எம் ஜி கே. நிஜாமுதீன், பேராசிரியர் இரா.முரளிதரன் ஆகியோர் உரை யாற்றினார்கள்.
கழ்வின் நிறைவாக மேனாள் நடுவண் நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முடிவில் பா.செல்வ பாண்டியன் நன்றி உரை கூறினார்.
நிகழ்ச்சியில் முது முனைவர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களை பற்றி கூறுகையில், மொழிக்காக முதன்முதலாகத் துவக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராக செயல்பட்டவர். இவரது பணிக்காலத்தில் தமிழ் பல்கலைக்கழகம் மாபெரும் கல்வி நிறுவனமாக செயல்பட்டது. தமிழ் மற்றும் தொல்லியல் தொடர்பாகப் பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெற்றது. திறமையான மாணவர்களும் உருவாக்கப்பட்டனர்.
மேலும் இவர் தமிழுக்கும்- திராவிட வியலுக்கும் தொண்டாற்ற பல நிறுவனங்களை உருவாக்கிய சிறப்பு மிக்கவரும் ஆவார். திராவிட மொழிகளின் வளர்ச்சிக்காக இன்னொரு கல்வி நிறுவனமாக ஆந்திர மாநிலம் குப்பத்தில் திராவிடப் பல்கலைக் கழகத்தை உருவாக்கிய சிறப்பும் இவருக்கே உரியதாகும்.
தமிழறிஞர் தனிநாயகம் அடிகளாருடன் இணைந்து உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தையும் உருவாக்கியவர். பல்வேறு ஆராய்ச்சிகளையும் நடத்தியவர் என்று விழாவில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டது.
பல்வேறு சிறப்புமிக்க தமிழ் மொழி ஆராய்ச்சியாளர் முது.முனைவர் வ.அய். சுப்ரமணியம் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விழா எடுக்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.




