நாமக்கல் அருகே உள்ள, வேட்டாம்பாடி கிராமம், கட்டபொம்மன் நகர் பிள்ளையார் நாச்சி குன்றின் மீது பூமி நீளா சமேத கலியுக வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், நாலாயிர திவ்ய பிரபந்தம், தேவாரம் ஓதுவார்கள், தவில், நாதஸ்வரம், உடுக்கை கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், நடன நாட்டிய கலைஞர்கள், கிராமிய பாடல் கலைஞர்கள், தெருக்கூத்து கலைஞர்கள், பாதுகாப்பு மற்றும் அரசு துறையில் சிறப்பாக பணியாற்றி வருபவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பரமத்தி சவுராஷ்டிரா சபா தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாநிலம் முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய கிராமிய இசைக்கலைஞர்களுக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மண்டல கலை பண்பாண்டு மைய உதவி இயக்குனர் ராஜாராமன், சவுராஷ்டிரா மத்திய சபா நிர்வாகிகள் சுரேந்திரபாபு, அருள்ஜோதி, கண்ணன், ஹரி நாத் மற்றும் ரவீந்திரன், தோட்டக்கலை துணை இயக்குனர் குமரவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை செந்தில்குமார், பாக்கியலட்சுமி, சக்திவேல், பானுமதி ஆகியோர் செய்திருந்தனர்.




