தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்ததை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் கட்சியினர் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
100 நாட்களின் ஆட்சி என்ற அடிப்படையில் பெண்கள் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்புக் குழு, குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் மற்றும் மதுபானக் கடைகள் மூடல் போன்ற அரசின் முக்கிய திட்டங்களையும் சாதனைகளையும் முன்னிலைப்படுத்தி இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்நிகழ்விற்கு தவெக மத்திய மாவட்ட கழக செயலாளர் ராஜ பிரகாஷ் தலைமை தாங்கினார். அப்போது பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் தமிழக வெற்றிக் கழக அரசு எப்போதும் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும்; முதல்வர் ஜோசப் விஜய் தொடர்ந்து தமிழக மக்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் தீவிரமாக செயல்படுவார் எனத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.




