Close
ஆகஸ்ட் 18, 2026 10:00 மணி

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளா் சுப்பாராவ்

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தொடா்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளா் சுப்பாராவ் ஆய்வு மேற்கொண்டாா்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோவிலில் அனுதினமும் ஆயிரக்கணக்கானபக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவந்து செல்கின்றனர்.

இதுமட்டுமின்றி திருவண்ணாமலை வியாபாரிகள், வணிகம் ரீதியாக வெளியூர் செல்ல திருவண்ணாமலை இரயில் நிலையத்தில் இருந்து இரயில் மூலம் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக மாதா மாதம் வரும் பௌர்ணமி நாட்களில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கினாலும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டு ரயில்வே நிலையத்தில் ஆயிரக்கணக்கானபக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்து வருகின்றனர்.

ஒவ்வொரு பௌர்ணமி முடிந்து பக்தர்கள் செல்லும் போது கூட்ட நெரிசல் அதிகப்படியாக இருப்பதால் ஒருவருக்கொருவர் ரயிலில் ஏற முண்டியடித்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று ஆன்மீக பக்தர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதன் அடிப்படையில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் சுப்பாராவ், திருவண்ணாமலை ரயில் நிலையம் வந்து ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, ரயில் நிலையத்தில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்ய வேண்டும். நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும் பௌா்ணமி நாள்கள் மற்றும் காா்த்திகை தீபத் திருவிழா காலங்களில் பக்தா்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை ரயில்வே நிலையம் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

திருவண்ணாமலை ரயில்வே நிலையத்தை ஆய்வு செய்ய வந்த தென்னக ரயில்வே பொது மேலாளர் சுப்பாராவிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கூடுதல் செயலாளர் .ராஜசேகர் தலைமையில் வியாபாரிகள் சங்கத் தலைவர் நாகராஜன், செயலாளர் பாலு, பொருளாளர் கார்த்திகேயன், செய்தி தொடர்பாளர் கபிலன் ஆகியோர் பொதுமக்கள் அதிகம் பயன் பெறக்கூடிய திருவண்ணாமலை- திண்டிவனம் ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த கோரி மனு அளித்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top