Close
ஆகஸ்ட் 20, 2026 8:18 மணி

நாமக்கல்லில் பாஜக சார்பில் ஒண்டிவீரன் நினைவேந்தல் நிகழ்ச்சி

நாமக்கலில் மாவட்டபாஜ சார்பில் நடைபெற்ற, சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவேந்தல் நிகழ்ச்சியில், அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நாமக்கல்லில் பாஜக சார்பில் சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் பகடை 255வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில், நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஒண்டி வீரன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மாநகர பாஜ தலைவர் தினேஷ், பட்டியலின மாவட்ட தலைவர் தமிழரசு, மாவட்ட பொது செயலாளர்கள் ராம்குமார், வக்கீல் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட அமைப்பாளர் வேல்ராஜ், முத்துகுமார், மாவட்ட பட்டியிலின பொதுச் செயலாளர்கள் அருள், விஜயகுமார், மாநில மகளிர் அணி செயலாளர் ராதிகா, மாவட்ட மகளிர் அணி தலைவர் சங்கீதா உள்ளிட்ட திரளான பாஜவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top