Close
ஆகஸ்ட் 20, 2026 8:16 மணி

விஷ ஊசி போட்டு மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

விஷ ஊசி போட்டு மனைவியை கொலை செய்த வழக்கில், நாமக்கல் நீதிமன்றம் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (30), மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரியா. தம்பதியினருக்கு திருமணமாகி 3 ஆண்டுகளானபோதும் குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அக்., 15ம் தேதிபிரியா அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி பிரியாவை, கணவர் ராஜேஷ் விஷ ஊசி போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் வழக்கு மீதான விசாரணை நிறைடைவடைந்தது. தொடர்ந்து வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது.

இதன்படி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜேசுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராதத்தைக் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top