நாமக்கல் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக ஸ்ரீதேவி எக் சென்டர் மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் 2வது பட்டியலை, அதன் பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்தார். அதில் நாமக்கல் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக ஸ்ரீதேவி எக் சென்டர் மோகன் (54) அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் ச.பே.புதூரில் வசித்து வரும் மோகன், பி.எஸ்சி (அக்ரி) பட்டப்படிப்பு படித்துள்ளார். தற்போது அதிமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளராக பணியாற்றி வருகிறார். விவசாயம், கோழிப்பண்ணை, கோழி முட்டை மற்றும் கோழி மருந்து வணிகம் செய்து வருகிறார்.
இவரது மனைவி மலர்விழி, மகள் ஜஸ்வர்த்திகாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் சஞ்சய் அஸ்வின். மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணியின் தீவிர ஆதரவாளரான மோகன் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.




