நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற, பட்டமளிப்பு விழாவில் 381 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கபட்டன.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா, கல்லூரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 281 மாணவ மாணவிகளுக்கு இளைநிலை பட்டங்கள், 100 பேருக்கு முதுகலை பட்டங்கள் என மொத்தம் 381 பேருக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார்.
2022-2024 ஆம் கல்வியாண்டில் முதுநிலை புவியியல் பாடப்பிரிவில் இக்கல்லூரி மாணவி பிரியதர்ஷினி பெரியார் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். அதேபோல், 2021-2024 ஆம் கல்வியாண்டில், இளநிலை புவியியல் பாடப்பிரிவில் தமிழன் என்ற மாணவர் 9வது இடத்தையும், இளநிலை புள்ளியியல் பாடப்பிரிவில் பாலமருது 10வது இடத்தையும் பெற்றுள்ளனர், அவர்களைப் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.




