Close
ஆகஸ்ட் 24, 2026 9:16 மணி

நாமக்கல் கவிஞர் இல்ல நூலகத்தில் கவிஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சி

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை 1888ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, நாமக்கல் அருகே உள்ள மோகனூரில் பிறந்தார். தமிழறிஞரும், கவிஞரும் சிறந்த ஓவியருமான அவர், கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.

காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டு, அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும் அகிம்சை பற்றியும் இருந்ததால், இவர் காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுகிறார்.

இவர் கடந்த 1972ம் ஆண்டு ஆக. 24ம் தேதி மறைந்தார். நாமக்கல்லில் அவர் வாழ்ந்த வீடு தமிழக அரசு சார்பில் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு, அங்கு நூலகம் செயல்படுகிறது.

நூலகத்தின் வாசகர் வட்டம் சார்பில் சார்பில் கவிஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை தலைவர் மோகன், மைய நூலக வாசகர் வட்ட தலைவர் தில்லை சிவக்குமார். இல்ல நூலகர் செல்வம் உள்ளிட்டோர் கவிஞரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top