Close
ஆகஸ்ட் 27, 2026 9:00 மணி

விவசாயிகளுக்கு மானிய விலையில் சேலார் மின் வேலி: கலெக்டர் தகவல்

விவசாயிகளுக்கு மானிய விலையில் சோலார் மின் வேலி அமைத்து தரப்படும் என கலெக்டர் கூறியுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், வேளாண்மைப் பொறியியல் துறை மூலம், தனி நபர் விவசாயிகளுக்கு, மானிய விலையில் சோலார் மின்வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் தங்கள் விளை நிலங்களிலுள்ள பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள், காட்டெருமைகள், மான்கள் மற்றும் யானைகள் போன்ற விலங்குகளிடமிருந்தும், சுற்றித்திரியும் கால்நடைகளிடமிருந்து பாதுகாக்கவும், வனவிலங்குகள், மனிதர்களுக்கு இடையேயான மோதலைத் தவிர்க்கவும், வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் சேலார் மின்வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மின்வேலியில் செலுத்தப்படும் உயர் மின் அழுத்தத்துடன் கூடிய, குறுகிய உந்து விசை மின் அதிர்ச்சியினால் விவசாய நிலங்களுக்குள் விலங்குகள் புகாதவாறு தடுக்கப்படுகிறது. இதன்மூலமாக விளைபொருள்களின் உற்பத்தி பாதிக்கப்படாமலும். மற்றும் அதன் மூலம் வருவாய் இழப்பு இல்லாமலும் தவிர்க்கலாம்.

விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு மின்வேலியை 5 வரிசை, 7 வரிசை அல்லது 10 வரிசை வரையான அமைப்பை தெரிவு செய்து கொள்ளலாம். தனிநபர் விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் அல்லது 566 மீட்டர் நீலம் மின்வேலி அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படும்.

மேலும் இத்திட்டம் தொடர்பாக கூடுதல் விவரங்களைப் பெற நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள வேளாண்மை பொறியியல் துறை விரிவாக்க மையங்களை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top