Close
செப்டம்பர் 3, 2026 2:22 காலை

நாமக்கல்லில் இரும்பு தொழிற்சாலைக்குள் புகுந்து காப்பர் பிளேட் திருட முயற்சி: 4 பேர் கைது

நாமக்கல் கே.கே.நகரை சேர்ந்தவர் நடராஜன் (65). அவர், நல்லூர் கிராமத்தில், இரும்பு உருக்கு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த ஒரு ஆண்டாக தொழிற்சாலையை நிறுத்தி வைத்துள்ளார்.

மேலும், தொழிற்சாலையை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டி, 10 சிசிடிவி கேமாரவும் பொருத்தி உள்ளார். அதில், இரண்டு கதவுகளில் அலாரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு, 11:50 மணிக்கு, நடராஜனின் மொபைல் போனில் அலாரம் அடித்துள்ளது.

அதிர்ச்சி அடைந்த அவர், சிசிடிவி கேமராவை பார்த்துள்ளார். அவரது தொழிற்சாலையில், 30 முதல், 40 வயது மதிக்கத்தக்க 5ந்து பேர், எலக்ட்ரிக்கல் பேனல் போர்டில் உள்ள காப்பர் பிளேட்டை கழற்றிகொண்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து தொழிற்சாலையின் உள்ளே சென்றார். அவரை பார்த்ததும், மர்ம நபர்கள் ஓட்டம் பிடித்தனர். அப்போது அவர்கள் கீழே விழுந்ததில், ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்களும் கீழே விழுந்து தப்பி ஓடியதில் காயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் உதவியுடன் விரட்டிப் பிடித்து நாமக்கல் காவல்துறையில் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த யுவராஜ் (38), சின்ன திருப்பதி சண்முகம் (33), வடக்கு அம்மாபேட்டை தேவா (28), மேச்சேரி கார்த்திக் (30) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி ஓடி தலைமறைவான சுப்புராஜ், மூர்த்தி ஆகிய இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top