Close
செப்டம்பர் 3, 2026 10:38 மணி

நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனை துவக்கம்

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை

நாமக்கல் மாவட்டத்தில் 171 நகர்ப்புற ரேஷன் கடைகளில், கிலோ ரூ. 35 வீதம் வெங்காயம் விற்பனை இன்று துவக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை ஏற்றம் காரணமாக, பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைடகளில் ஒரு கிலோ ரூ 35க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு விவசாய கூட்டுறவு விற்பனை இணையத்தில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு 25 டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம், 171 நகர்ப்புற ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை இன்று துவக்கப்பட்டது.

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு உட்பட்ட ரேஷன் கடையில், நடைபெற்ற நிகழ்ச்சியில், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெங்காயம் விற்பனையை துவக்கி வைத்தார். துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) சரவணன், என்சிஎம்எஸ் அலுவலர் அறிவழகன், கூட்டுறவு சார் பதிவாளர் தியாகராஜன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய இயக்குனர் சரவணன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top