Close
செப்டம்பர் 7, 2026 4:09 மணி

விண்டேஜ் இளையராஜா! 82 வயதிலும் கலக்கும் ராஜா

1970-களின் பிற்பகுதி, 1980-கள் மற்றும் 1990-களின் முற்பகுதியில் இசைஞானி வழங்கிய காலத்தால் அழியாத பொக்கிஷமான, மெல்லிசை மற்றும் அவர் செய்த சோதனை முயற்சிகளைக் குறிப்பதாகும்.

தமிழ் திரையிசையில் மேற்கத்திய செவ்வியல் இசை மற்றும் நாட்டுப்புற இசையை அற்புதமாக இணைத்து, ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியவர் நம் ராஜா.

பாடல்களை விட காட்சிகளுக்கு உயிரூட்டும் பின்னணி இசையில் ஞானியின் பங்களிப்பு இணையற்றது.
மௌனம் பேசும் காட்சிகளில் கூட இசையின் மூலம் உணர்வுகளை கடத்தும் வித்தை அவருக்கு மட்டுமே சாத்தியமானது. சிம்பொனி,, ஆர்கெஸ்ட்ரா போன்ற மேற்கத்திய வடிவங்களை தமிழ் சினிமாவில் முதன் முதலில் பரவலாக அறிமுகப்படுத்தியவர் இவர்தான். கிராமிய மண் குடில் வாசனையுள்ள தாளங்களை அப்படியே நவீன ஆர்க்கெஸ்ட்ரேஷனுடன் இணைத்து உலக அளவில் கொண்டு சேர்த்தார்.

‘அன்னக்கிளி’ முதல் ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மௌன ராகம்’, ‘நாயகன்’, ‘அஞ்சலி’ என பல தலைமுறைகளைக் கடந்தும் இன்றைய இளைய தலைமுறை இளைஞர்களையும் ஈர்க்கும் ஆற்றல் விண்டேஜ் ராஜா இசையிடம் உள்ளது.

இளையராஜாவின் இந்த பொற்கால இசை இன்று வரை பல இசைக்கலைஞர்களுக்கு ஒரு திறந்தவெளிப் பாடசாலையாகவே திகழ்கிறது.

இணைப்பில் டோரதி படத்தில் வெளியாகி இருக்கும் “முத்துமணி” பாடலின் ஒரு பகுதி. இதில் குறிப்பாக “வாடி மீனாட்சி..,” என ராஜாவின் குரல் மேலே ஏறும் அந்த இடத்தில் சொக்கி தான் போகிறேன்.

\இதுவரை இந்த இசை ராஜா, நடத்திய ராஜாங்கத்தில்..,நவீன காலத்திற்கேற்ற பாணிக்கு, சமரசம் ஆகாமல், தன் மயக்க வைக்கும் பழைய மந்திரத்துடன் தான் பல பாடல்கள் கொடுத்திருக்கிறார். அந்த விண்டேஜ் ரகத்தில் இந்த ஆல்பம் ஒரு மைல்கல்.

இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎼🎶🎵

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top