Close
செப்டம்பர் 11, 2026 6:36 மணி

நாமக்கல் மாநகராட்சியில் லைசென்ஸ் பெறாமல் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டால் நடவடிக்கை: ஆணையர் எச்சரிக்கை

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் லைசென்ஸ் பெறாமல் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்.

நாமக்கல் மாநகராட்சியில் தொழில் லைசென்ஸ் பெறாதவர்கள், லைசென்ஸ் பெறுவதற்கான சிறப்பு முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமை வகித்து பேசியதாவது: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை அனைவரும் மாநகராட்சியின் தொழில் லைசென்ஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதையொட்டி, நாமக்கல் மாநகராட்சியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் தொழில் லைசென்ஸ் வேண்டி 30 பேர் மனு அளித்துள்ளனர். அவர்களுக்கு தொழில் லைசென்ஸ் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும்.

மாநகராட்சி லைசென்ஸ் இன்றி செயல்படும் அனைத்து வகையான தொழிற்சாலைகள், வர்த்தக வியாபார நிறுவனங்கள் உடனடியாக லைசென்ஸ பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமம் இன்றி தொழில் நிறுவனங்கள் அந்த நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்படும். மேலும் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் கஸ்தூரிபாய், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் சுப்பிரமணி, செல்வகுமார், ஜான் ராஜா, நந்தினி மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top