Close
செப்டம்பர் 20, 2024 4:10 காலை

45 ஆண்டு காலமாக சேவையைத் தொடரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில்

மதுரை

மதுரை வைகை விரைவு ரயிலுக்கு இன்று 45 வயது

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின்   45-ஆண்டு கால சேவையை பிறந்த நாள் போல கேக் வெட்டி பயணிகள் கொண்டாடினர்.

இந்திய நாடு முழுவதும் 75-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை நாட்டுமக்கள் தத்தம் வீடுகளில் கொடி ஏற்றி வைத்து வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு ஆதராமாக திகழும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 45-ஆவது பிறந்தநாளைக் ரயில் பயணிகள் கேக் வெட்டியும், சிறப்பு பூஜைகள் செய்தும், ரயில் ஓட்டுனருக்கு மரியாதை செய்தும் உற்சாகமாக கொண்டாடினர்.

மதுரை
வைகை எக்ஸ்பிரஸ் கேக்

கடந்த 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் அறிமுகப் படுத்தப்பட்ட சென்னை மற்றும் மதுரைக்குச் செல்லும் பகல் நேர விரைவு ரயிலாக உள்ள இந்த ரயில் தென் மாவட்ட வணிகர்கள் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது .குறிப்பாக இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே மீட்டர் கேஜ் ரயில் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்ற இந்தியாவின் அதி விரைவு ரயில் என்ற பெருமையைப் பெற்றது. ஆசியாவிலேயே மீட்டர் கேஜில் அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில் என்ற பெருமையும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உண்டு.

நாள்தோறும் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.35 மணிக்கு சென்னையை சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 25 நிமிடங்கள். அதேபோன்று மறு மார்க்கமாக சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் மதுரை வந்தடையும். இதில் மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடங்கள் ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top