Close
மே 16, 2024 8:53 காலை

வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க மானியம்

புதுக்கோட்டை

வேளாண்துறை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள்பழுது நீக்கும் பராமரிப்பு மையம் மானியத்தில் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு  வெளியிட்ட தகவல்:

புதுக்கோட்டைதமிழக அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்தித் திட்டத்தின் கீழ் ‘வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம்” மானியத்தில் அமைக்கும் புதிய திட்டத்தை கடந்த 2021-22 -ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
விவசாயிகள் தங்கள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை தங்கள் விளைநிலங்க ளிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளுமின்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி, நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன.

தொழில் முனைவோர், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இம்மையங்கள் மானியத் தில் அமைத்துத் தரப்படும். இம்மையங்கள் ரூ.8.00 இலட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.4  லட்சம் மானியம் வழங்கப்படும்.
மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில்முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை புது;கோட்டை (நெடுஞ்சாலைத் துறை அருகில், திருக்கோகர்ணம்) மற்றும் அறந்தாங்கி (இராஜேந்திரபுரம்) அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம்.

மாவட்ட ஆட்சியரின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்துத் தரப்படும்.மையங்கள் அமைக்கத் தேவையான இயந்திரங்கள் ஒப்பந்தப் புள்ளி அடிப்படையில் கண்காணிப்புப் பொறியாளர் (வேபொ) அவர்களால் முடிவு செய்யப்பட்டு, பயனாளிகள் மொத்தத் தொகையினை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.

பின்னர் சம்பந்தப்பட்ட உதவி செயற் பொறியாளர் (வேபொ) மையத்தினை நேரில் ஆய்வு செய்து திருப்தி அளிக்கும் வகையில் இருப்பின் மானியத் தொகையினை பயனாளியின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும்.

மேலும், விவரங்களுக்கு உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை புதுக்கோட்டை (நெடுஞ்சாலைத் துறை அருகில், திருக்கோகர்ணம்) மற்றும் அறந்தாங்கி (இராஜேந்திரபுரம்) அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top