Close
மே 20, 2024 9:21 மணி

திருச்சியில் மலேசிய தமிழ் எழுத்தாளரின் நூல் அறிமுக விழா

திருச்சிராப்பள்ளி

மலேசியா எழுத்தாளர், மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக நீண்ட காலம் பொறுப்பில் இருந்தவர் பெ. ராஜேந்திரன் அவர்களின் மந்திரக் கணங்கள் என்னும் நூல் அறிமுக விழாவில் பங்கேற்றோர்

மலேசியா எழுத்தாளர், மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக நீண்ட காலம் பொறுப்பில் இருந்தவர்  பெ. ராஜேந்திரன் எழுதிய  மந்திரக் கணங்கள் என்னும் நூல் அறிமுக விழா அண்மையில் நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவர்,  நந்தலாலா, உயிர் எழுத்து ஆசிரியர் சுதீர் செந்தில், திரைப்பட இயக்குனர் கண்மணி ராஜாமுகமது  மற்றும் புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி உள்ளிட்ட  பொறுப்பாளர்களும் பங்கேற்று பேசினர்..

இதில் கவிஞர் தங்கமூர்த்தி பேசுகையில், புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரின் வாழ்க்கைப் பயணங்களை, நிகழ்வுகளை , இலக்கியத் தடங்களை எடுத்துரைக்கிறது இந்நூல் எனக்குறிப்பிட்டார்

இந்நிகழ்ச்சியை நந்தவனம் சந்திரசேகரன் ஏற்பாடு செய்திருந்தார். எழுத்தாளர் சுதீர் செந்தில்  நன்றி தெரிவித்தார்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top