Close
மே 20, 2024 9:39 மணி

நியூஸ் கிளிக் பத்திரிகை மீதான எப்ஐஆர் நகல் எரிப்பு போராட்டம்

தஞ்சாவூர்

நியுஸ் கிளிக் மீதான அடக்குமுறையைக்கண்டித்து நகல் எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர்

நியூஸ் கிளிக் பத்திரிக்கை மீதான எப்ஐஆர் நகல் எரிக்கும் நாடுதழுவிய போராட்டம்  ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தஞ்சையில் நடைபெற்றது.

தலைநகர் தில்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் தொடர்பான உன்மை செய்திகளை வெளியிட்டு, ஆதரவு தந்த
நியூஸ் கிளிக் பத்திரிகையாளர் மீதான அடக்குமுறை, உபா உள்ளிட்ட பொய் வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்தும், பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான ஒன்றிய அரசின் அடக்குமுறையை கண்டித்தும் எப் ஐ ஆர் நகல் எரிப்பு நாடு தழுவிய போராட்டம் தஞ்சாவூர் ரயிலடி முன்பு  நடைபெற்றது.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகள் சு.பழனிராஜன், சோ.பாஸ்கர், பி.செந்தில் குமார், அ.பன்னீர்செல்வம், பி.கோவிந்தராஜ், பி.ஜோதிவேல், எம்.பழனியய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி,

மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், சிபி எம்எல்மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் இரா.அருணாச்சலம்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ். எம்.ஜெய்னுல்ஆபிதீன், மக்கள் கலை இலக்கியக் கழக மாநில இணைச்செயலாளர் ராவணன், தொழிற்சங்க நிர்வாகிகள் துரை.மதிவாணன், கே.அன்பு, ஆர்.பி. முத்துக்குமரன், ஏ.ராஜா, இந்திய மாணவர் சங்க நிர்வாகி அர்ஜுன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top