Close
மே 19, 2024 3:07 காலை

மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் அரசு மற்றும் அரசியல் கட்சியினர் மரியாதை

சிவகங்கை

திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் வீர வணக்கம் செலுத்திய லெனின் கம்யூனிஸ்ட் கட்சியினர்

மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 221 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்வில்,

திருப்பத்தூர்
மருதுபாண்டியர் நினைவிடத்தில் அரசு சார்பில் தேசியக்கொடி ஏற்றி ஆட்சியர் ப.மதுசூதனரெட்டி தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது

மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன்ரெட்டி தலைமையில் தேசியக்கொடி ஏற்றி வீர வணக்கம் செலுத்தப்பட்டதுய இதில், காவல்துறையினர் உள்பட பல்வேறு அலுலலர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர்
திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்

அதிமுக சார்பில் அமைப்புச் செயலரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

லெனின் கம்யூனிஸ்ட்கட்சி:

திருப்பத்தூரில் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் அமைந்திருக்கும் நினைவுத் தூணிற்கு லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஸ்டாலின், மாவட்டச் செயலாளர் ராஜசேகர், திருச்சி மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம், மாதர் சங்கம் அனுகாயத்திரி.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எஸ்.ரஞ்சித்குமார், திருப்பத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் கருப்பையா, ஆகியோர் மருதுபாண்டியர்களின் நினைவுத் தூணிலும் நினைவு மண்டபத்திலுள்ள அன்னாரது சிலைகளுக்கும்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top