Close
மே 11, 2024 11:22 மணி

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்: அதிமுகவினர் ஆலோசனை

பெருந்துறை

அதிமுக ஆலோசனைக்கூட்டம்

பெருந்துறையில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழா தொடர்பாக மாவட்ட கழக செயலாளர் கே. சி. கருப்பணன், சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில்   புதன்கிழமை (மே. 10) நடைபெற வுள்ள   ஆலோசனைக் கூட்டத்தில்  அதிமுகவினர் திரளான கலந்துகொள்ள வேண்டுமென  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெருந்துறை

முன்னாள் முதல்வரும் கழகத்தின் பொதுச் செயலாளருமான எடப்பாடியார் 69 -ஆவது பிறந்தநாள் விழா 12-5-2023 வெள்ளிக் கிழமை அன்று பெருந்துறையில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. எடப்பாடியார் கழகத்தின் பொதுச்செயலாளராக பொறுப் பேற்றுக் கொண்டதற்கும் அவரது பிறந்த நாளை கொண்டா டுவதற்கும் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி முழுவதும் சுய வேலை வாய்ப்பை தேடும் இளைஞர்களுக்கு மானிய விலையில் 200 ஆட்டோக்களை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை இணை செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழி குழு உறுப்பினருமான ஜெயக்குமார் தனது சொந்த பொறுப்பில் வழங்குகிறார்.

மேலும், சட்டமன்ற தொகுதி முழுவதும் அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பதாகை, கொடி, தோரணங்கள் என கழகத்தினரை உற்சாகப்படுத்தும் வகையிலும்,
நாளைய முதல்வர் எடப்பாடியார் என பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையிலும், இந்த விழா அமைய வேண்டும் என்பதற்காக நமது முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளரும், பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே.சி. கருப்பணன் தலைமையில், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் முன்னிலையில்

மாவட்ட கழக பொறுப்பாளர்கள், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நாளை (10-05-23) புதன்கிழமை காலை 10 மணி அளவில் ஈரோடு சாலை, வெங்கமேடு ஜே.கே. டிரேடர்ஸ் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

எனவே, அதிமுக நிர்வாகிகள்  அனைவரும் தவறாமல் கூட்டத்தில்  கலந்து கொண்டு  மேலான ஆலோசனைகளை வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top