Close
மே 20, 2024 4:35 மணி

புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் பார்வையாளர் மோனிகா ராணா  ஆட்சியர் கவிதாராமுவிடம் கலந்தாய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு மற்றும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் மோனிகா ராணா உள்ளிட்டோர்

புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் பார்வையாளர் மோனிகா ராணா, நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் நடத்துதல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு மற்றும் அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (04.02.2022)  நடந்த கலந்தாய்வு க்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) என்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் பார்வையாளர் டாக்டர்.மோனிகா ராணா, அரிமளம் பேரூராட்சியில் பறக்கும் படையினர் பணிகளில் ஈடுபட்டிருந்ததை  பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அரிமளம் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்த புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் பார்வையாளர் அவர்கள் வேட்புமனு விண்ணப்பப் படிவங்களையும், அதற்கான பதிவேட்டினையும் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும்  ஆய்வு செய்தார்.

பின்னர் அரிமளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் ஆய்வு செய்து, வாக்குச்சாவடி அறைகள் மற்றும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவற்றை  ஆய்வு செய்தார்.
தேர்தல் நடத்தை விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டுமெனவும், அடிப்படை வசதிகள் வாக்காளர்களுக்கு தவறாமல் செய்யப்பட வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு ப அறிவுறுத்தினார்.

 ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், வட்டாட்சியர் பிரவினாமேரி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top