Close
மே 13, 2024 4:40 மணி

திருவொற்றியூரில் பூப்பந்து போட்டி: 35 அணிகள் பங்கேற்பு

சென்னை

திருவொற்றியூரில் நடைபெற்ற மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகளை வழங்கிய தொழிலதிபர் கே.பி எஸ்.அரவிந்தன். உடன் மாநில செயலாளர் வி. எழிலரசன், மாவட்ட தலைவர் எம். மதியழகன் மற்றும் பூப்பந்தாட்ட கழக நிர்வாகிகள் உள்ளனர் .

திருவொற்றியூரில் நடைபெற்ற மாநில அளவிலான பூப்பந்து போட்டிகளில் 35 அணிகள் பங்கேற்றன.  இதில் தென்னக ரயில்வேயைச் சார்ந்த ராஜேஷ்- சத்தியமூர்த்தி ஆகிய இரட்டையர் முதல் இடத்தை பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் ஆலிஸ் வேதமாணிக்கம் நினைவு கோப்பை பூப்பந்து போட்டி திருவொற்றியூரில் பிப். 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.  இதில் தமிழகம் முழுவதும் இருந்து 35 இரட்டையர் அணிகள் பங்கேற்றன. இதில் தென்னக ரயில்வே சார்ந்த ராஜேஷ்- சத்யமூர்த்தி முதலிடத்தையும் ஐ சி எப் ஐ சேர்ந்த அரவிந்த் விக்னேஷ்-இரண்டாம் இடத்தையும், சிவகுரு- சந்தோஷ் ஆகியோர் அடங்கிய இணை மூன்றாம் இடத்தையும் பெற்றது.  மேலும் இரண்டு அணிகளுக்கு ஆறுதல் பரிசுகள் அளிக்கப்பட்டன.
இதனையடுத்து நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .பூப்பந்தாட்ட கழக மாநில செயலாளர் வி. எழிலரசன் தலைமையிலும் மாவட்ட பூப்பந்தாட்ட கழக தலைவர் எம்.மதியழகன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் கே.பி.எஸ். அரவிந்தன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஜி.வரதராஜன், தொழிற்சங்க தலைவர் என்.துரைராஜ்,  சமூக சேவை சங்க நிறுவனர் கோட்டீஸ்வரன், தி.மு.க. பகுதி அவைத்தலைவர் ஆர்.சி. ஆசைதம்பி,  சமூக சேவகர் கே. சுப்பிரமணி,  பூப்பந்தாட்ட கழக நிர்வாகிகள் நந்தா, மாரிமுத்து, தயாளன், ஆனந்த், மகேஸ்வரி, ஜஸ்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top