Close
மே 21, 2024 1:21 காலை

மறைந்த சுதந்திர போராட்ட வீரர் என்.சங்கரய்யாவுக்கு தமுஎகச சார்பில் புகழஞ்சலி

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தமூஎகச சார்பில் நடைபெற்ற என். சங்கரய்யாவுக்கு அஞ்சலி கூட்டம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் முதுபெரும் பொதுவுடமை இயக்கத் தலைவர்  என். சங்கரையாவுக்கு புதுக்கோட்டையில் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை அறிவியல் இயக்க கூட்ட அரங்கில் நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்வுக்கு தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன் தலைமை வகித்தார். ‘சங்கரய்யாவின் எழுத்தும் பேச்சும்’ என்ற தலைப்பில் மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன், ‘பொதுவுடமை இயக்க வரலாற்றில் சங்கரய்யா’ என்ற தலைப்பில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், ‘சுதந்திரப் போரில் சங்கரய்யா’ என்ற தலைப்பில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி என்.கண்ணம்மாள் ஆகியோர் உரையாற்றினர்.

‘தமுஎகச உருவாக்கத்தில் சங்கரய்யா’ என்ற தலைப்பில் மாவட்டச் செயலாளர் எம்.ஸ்டாலின் சரவணன், ‘சட்டமன்றத்தில் சங்கரய்யா’ என்ற தலைப்பில் புதுகை பிலிம் சொசைட்டி நிறுவனர் எஸ்.இளங்கோ, ‘இதழ் பணியில் சங்கரய்யா என்ற தலைப்பில் சினிமா பாடலாசிரியர் இரா.தனிக்கொடி, பத்திரிகையாளர் சு.மதியழகன் ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் சு.பீர்முகமது வரவேற்றார். பொருளாளர் கி.ஜெயபாலன் நன்றி கூறினா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top