Close
ஏப்ரல் 23, 2026 11:33 மணி

சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியின் போது உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு நிவாரண நிதி: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே  சிராவயல் ஊராட்சியில்   மஞ்சுவிரட்டுப்போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே நடைபெற்ற மாடு முட்டிய சம்பவத்தில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு இரங்கல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்ட இரங்கல் செய்தி:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சியில்  17.01.2024 அன்று மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே நடைபெற்ற சம்பவத்தில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சி, மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துராமன் மகன் முத்துமணி (32)  மற்றும் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், கே.வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமணன் மகன்  பாஸ்கரன் (12) ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரமானச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3  லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top