Close
மே 20, 2024 9:21 மணி

புதுச்சத்திரம் பகுதியில் பகுதி நேர ரேசன் கடைகள் திறப்பு விழா..!

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் பகுதிநேர ரேசன் கடைகளை எம்.பி. ராஜேஷ்குமார் மற்றும் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

நாமக்கல்:
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் பகுதிநேர ரேசன் கடைகளை எம்.பி. ராஜேஷ்குமார் மற்றும் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில், அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக, நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், என். தோட்டக்கூர்ப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் இலக்கியம்பட்டி ரேசன் கடையில் இருந்து பிரித்து, நவணி கிராமத்தில் புதிதாக பகுதி நேர ரேசன் கடை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், என். தோட்டக்கூர்ப்பட்டி ரேசன் கடையில் இருந்து பிரித்து பள்ளிப்பட்டி கிராமத்தில் புதிதாக மற்றொரு பகுதி நேர ரேசன் கடை அøக்கப்பட்டுள்ளது.

புதிய பகுதி நேர ரேசன் கடைகள் திறப்பு விழாவில் ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு, ரேசன் கடைகளை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் பொது விநியோகத் திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் சுரேஷ் , கள அலுவலர் திருமுருகன், வட்ட வழங்கல் அலுவலர் சின்னத்தம்பி, சங்க செயலாளர் சித்தேஸ்வரன், சங்கப் பணியாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top