Close
மே 10, 2024 11:00 காலை

நாமக்கல்லில் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்..!

நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் பெண் தொழிலாளர்கள் சார்பில், சர்வதேச மகளிர் தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

நாமக்கல்:
நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் பெண் தொழிலாளர்கள், சர்வதேச மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பிரிவில் மொத்தம் 29 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இதில் 100 க்கு மேற்பட்ட ஆன் தொழிலாளர்களும், 50க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களும் இரவு பகல் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, 108 பெண் தொழிலாளர்கள் சார்பில், மகளிர் தின விழா நடைபெற்றது. பாலின சமத்துவத்தை நோக்கி பெண்களின் பயணத்தின் மிக முக்கிய படியாக, இந்த நாள் அமைந்திருப்பது வெறும் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், பாலின சமத்துவம் மற்றும் பல்வேறு துறைகளில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்துவதை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர் அவர்கள் கேக் வெட்டி பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் குமரன் மாவட்ட மேலாளர் சின்னமணி, வாகன பராமரிப்பு மேலாளர் மணிராஜ், மனிதவளத்துறை அலுவலர் வெங்கடேஷ் மற்றும் திரளான ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top