Close
மே 18, 2024 11:35 காலை

ஸ்டேட் பாங்க் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆர்.எஸ் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, குடியாத்தம் நகர செயலாளர் பி.காத்தவராயன், பேர்ணாம்பட்டு தாலுக்கா செயலாளர் சி.சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய பாஜக அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போவதை கண்டித்து, உடனடியாக தேர்தல் பத்திரம் மூலம் நிதி வழங்கியவர் பட்டியலை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கண்டன ஆர்பாட்டத்தில், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.குணசேகரன், வே.குபேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன் ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
இறுதியாக, மாநில குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி அவர்கள் நிறைவு ஆற்றினார். இதில், பேர்ணாம்பட்டு பகுதி செயலாளர் தலித் பாஸ்கர் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் கலந்துக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top