Close
ஏப்ரல் 23, 2026 10:01 மணி

டி.மேட்டுப்பட்டி ஸ்ரீ அழகுமுத்தாலம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா..!

ஸ்ரீ அழகுமுத்தாலம்மன், திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள டி.மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள
ஸ்ரீ அழகுமுத்தாலம்மன், திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கள இசை முழங்க கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அதனை தொடர்ந்து முதல் கால யாக வேள்வி ஆரம்பமாகி மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து இரண்டு கால யாகபூஜையுடன் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோயிலைச் சுற்றி வலம் வந்து பின் வானத்தில் கருடன் வட்டமிட கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் கோயில் கருவறையில் அமைந்துள்ள அழகு முத்தாலம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை மலர்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை ஆயிர வைசியர், இந்து சோழிய செட்டியார்கள் உறவின்முறை மற்றும் நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம், கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top