Close
ஏப்ரல் 24, 2026 12:58 காலை

சட்ட உதவிகள் வழங்கும் குழுவிற்கு 2 நாள் பயிற்சி முகாம்

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட நீதிபதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு சட்ட உதவி வழங்கும் குழுவுக்கான 2 நாள் பயிற்சி முகாமை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி மதுசூதனன்  தொடங்கிவைத்தாா்.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி, மனநலம் பாதிக்கப்பட்டவா், மனநலம் குறைபாடுள்ளவா்களுக்கு சட்ட உதவிகள் வழங்கும் திட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கென மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் வழக்குரைஞா்கள், சட்ட துணை தன்னாா்வலா்கள் உறுப்பினா்களாக உள்ளனா்.

இவா்களுக்கான 2 நாள் பயிற்சி முகாமின் தொடக்க நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில்  நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், முதன்மை சாா்பு நீதிபதியுமான முகமது ரிஸ்வனுல்லா செரிப் தலைமை வகித்தாா்.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான மதுசூதனன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு 2 நாள் பயிற்சி முகாமை தொடங்கிவைத்துப் பேசினாா். ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமலதா டேனியல் வாழ்த்துரை வழங்கினாா்.

முகாமில், நீதிபதிகள்,குழந்தைகள் காப்பகத்தின் உறுப்பினா், காவல் துறை ஆய்வாளா், சட்ட துணை தன்னாா்வலா்கள், சட்ட உதவி பாதுகாப்பு வழக்குரைஞா்கள், வழக்கறிஞர்கள், சட்டப் பணிகள் ஆணையக் குழு அலுவலர்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top