Close
மார்ச் 7, 2026 2:33 மணி

நாமக்கல் பழைய பேருந்து நிலைய டூ வீலர் ஸ்டாண்டில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு: இந்து மக்கள் கட்சி புகார்

நாமக்கல் பழைய பேருந்து நிலையம அருகில் உள்ள மாநகராட்சி டூ வீலர் பார்க்கிங் ஸ்டாண்டில், டூ வீலர் நிறுத்த ரூ. 10க்கு பதில் 15 வசூலிக்கும் காண்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக இந்து மக்கள் கட்சி, மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்துள்ளது.

இது குறித்து, தமிழக இந்து மக்கள் கட்சி, மாநில செயலாளர் கிருஷ்ணசாமி, நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவகுமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரில், மாநகராட்சிக்கு சொந்தமான டூ வீலர் பார்க்கிங் ஸ்டாண்ட் உள்ளது. இதை தனியார் ஒருவர் காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருகிறார். ஒரு டூ வீலர் நிறுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ. 10 கட்டணமாக அறிவித்துள்ளது.

ஆனால் கான்ட்ராக்டர் அவராகவே ஒரு டூ வீலருக்கு ரூ. 5 உயர்த்தி ரூ. 15 வீதம் முறைகேடாக வசூல் செய்து வருகிறார். மேலும் வசூலிக்கும் பணம் எவ்வளவு என்பதை குறிப்பிட்டு, முறையாக ரசீது வழங்குவதில்லை. ரசீதில் மாநகராட்சி கமிஷனர் கையொப்பமே, காண்ட்ராக்டர் கையொப்பமே சீலோ எதுவும் இல்லை.

இதனால் நாள்தோறும் வாகனங்களை நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்லும் பொதுமக்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 150 வரை அதிகம் செலவாகிறது. மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் நஷட்ம் ஏற்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் டூ வீலர் ஸ்டாண்ட் கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுத்து, அவரது கான்ட்ராக்ட்டை ரத்து செய்து, மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக டூ வீலர் ஸ்டாண்டை நடத்த முன்வரவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top