Close
ஏப்ரல் 24, 2026 1:22 காலை

வாடிப்பட்டி பகுதியில் சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.

குலசேகரன் கோட்டையில் குலசேகர பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்து அன்னாபிஷேகமும், மீனாட்சி அம்மனுக்கு அன்னபாவாடை சாற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னாபிஷேக பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதன் ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

குட்லாடம்பட்டி கொட்டமடைக்கி கண்மாய்கரையின் கீழ் பகுதியில் 36 அடி உயர லிங்க வடிவிலான தியான மண்டபத்துடன் கூடிய அண்ணாமலையார் கோவிலில் நடந்த அன்னாபிஷேகத்தில் லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னாபிஷேக அன்னதானம் வழங்கப்பட்டது. இதன் ஏற்பாடுகளை அண்ணாமலை டிரஸ்டி கோபிநாத் தலைமையில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

ட்லாடம்பட்டி அஞ்சு குழி கண்வாய் சாலையில் சிறுமலை அடிவாரத்தில் தென்னந்தோப்பு பகுதியில் உள்ள லலிதாம்பிகை ஈஸ்வரர் உடனுறை லலிதாம்பிகேஸ்வரி ஆலயத்தில் லிங்கேஸ்வரருக்கு அண்ணா அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மாலை 5 மணிக்கு பௌர்ணமி விளக்கு பூஜை நடந்தது. இதன் ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top