Close
ஏப்ரல் 24, 2026 12:56 காலை

உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்

மதுரை, உசிலம்பட்டியில் அதிமுக நகர் கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா- வின் 9- ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில், அதிமுக நகர் கழகத்தின் சார்பில் நகர செயலாளர் பூமா ராஜா தலைமையில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஐ. மகேந்திரன் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து நினைவு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் புரட்சி தலைவி அம்மா நினைவு நாளில், இதே நாளில் அதிமுக ஆட்சி அமைந்து எடப்பாடியார் தலைமையில் நாம் அனைவரும் நினைவு நாளை கொண்டாடுவோம் என, சூளூரைத்து மௌன அஞ்சலி செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top