Close
ஏப்ரல் 23, 2026 10:00 மணி

மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னும் பணியிட மாற்றம் செய்யப்படாத அறநிலையத்துறை அதிகாரி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இடமாற்றம் பெரும்பாலும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்களைக் கருத்தில் கொண்டு, நிர்வாக காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது.

முறைகேடுகள் அல்லது நிர்வாக நலன் கருதி, உதவி ஆணையர்கள் உட்பட அதிகாரிகள் ஒரு கோயிலில் இருந்து மற்றொரு கோயிலுக்கு அல்லது மண்டலத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரியும் அதிகாரிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். இது தான் பொதுவான நடைமுறை.

ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் பணிபுரியும் ஒரு பெண் அதிகாரி மூன்றாண்டுகள் நிறைவு பெற்றும் இன்னும் அதே கோயிலில் பணியில் தொடர்ந்து வருகிறார்.

மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுவதற்கு முன்னமே அதிகாரிகளின் பணியிட மாற்றம் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு விடும். ஆனால் இவர் விஷயத்தில் அவ்வாறு நடந்ததா என தெரியவில்லை.

நமக்கு கிடைத்த தகவல்களின்படி மேலிடத்தில் தனக்கு உள்ள செல்வாக்கு காரணமாக அதே கோயிலில் பணியை மேலும் தொடர்வதற்கு முயற்சி செய்து வருகிறார் என தெரிகிறது.  இதற்கு எத்தனை ஸ்வீட் பாக்ஸ் சென்றது என தெரியவில்லை.

பணியிடமாற்ற விதி என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால் செல்வாக்கு உள்ளவர்கள் அந்த விதியை மீறி அதே இடத்தில் பணிபுரியலாம் என்ற நிலை வந்தால், விதியை நினைத்து நொந்து கொள்ள வேண்டியது தான்.

எனவே, அந்த அதிகாரியின் பணியிட மாற்றம் குறித்து அறநிலையத்துறை விரைவாக நடவடிக்கை எடுக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top