Close
ஏப்ரல் 28, 2026 9:46 மணி

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த கிரிக்கெட் நட்சத்திரங்கள்

கிரிவலம் வந்த கிரிக்கெட் நட்சத்திரங்கள்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தி  ஆகியோர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து, கிரிவலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் ரமண மகரிஷி ஆசிரமங்களுக்கு  சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .

வெளிநாடு, வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது அதேபோல், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர்கள்

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தார்.

முன்னதாக சம்பந்த விநாயகரை வணங்கிய அவர் தொடர்ந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். தொடர்ந்து வைகுந்த வாயிலிருந்து தீப மலையை தரிசித்த அவருக்கு கோவில் சார்பாக மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது .

மைதானத்தில் அதிரடி காட்டும் கிரிக்கெட் வீரர்களை நேரில் பார்த்த உற்சாகத்தில், அங்கிருந்த ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படம் மற்றும் செல்ஃபிக்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

எப்பொழுதும் திருவண்ணாமலைக்கு அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் வருவது வழக்கம், ஆனால் இம்முறைடி20 உலகக் கோப்பை வெற்றியின் மகிழ்ச்சியை இறைவனோடு பகிர்ந்து கொள்ள வந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்த இளம் வீரர்களின் வருகை, திருவண்ணாமலையில் பொது மக்களிடையே பெரும் பரபரப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top