மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஒன்றிய மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து ஆபாச வார்த்தைகளால் பேசியதை கண்டித்து சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் விஜய் ஹரிஷ், தாமோதரன், தியாகராஜன், நகர் செயலாளர் ரஞ்சித் நிர்வாகிகள் முன்னால் கூட்டுறவு வங்கி தலைவர் பாலாஜி தனசேகர் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய மகளிரணி தலைவி லட்சுமி கண்டன உரையாற்றினார். இதில் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள்சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பரப்பியதாகவும், ஆபாச வார்த்தையால் பேசியதாகவும், காவல்துறை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து தமிழக வெற்றிக்கழக மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.




