தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து, கட்சி தலைமையின் அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி புதிய பேருந்து நிலையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சுமார் 400-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், தென்காசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் வெறும் 20 நிமிடங்களிலேயே நிறைவடைந்ததது கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் மாவட்ட செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது, மீண்டும் அங்கு சித்திக் என்பவர் தலைமையில் ஒரு குழு தனியாக அதே இடத்தின் அருகே கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது இதுவும் 1 நிமிடத்திற்குள் முடிவடைந்தது




