Close
செப்டம்பர் 19, 2026 8:32 காலை

நாமக்கல்லில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

இந்தியா முழுவதும் கடந்த 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் 765 விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட பல்வேறு இந்து அமைப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் போலீசார் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் அனுமதி இல்லாமல் நூற்றுக்கணக்கான இடங்களிலும், வீடுகளிலும் பக்தர்கள் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

வழிபட்ட சிலைகளை நாமக்கல்லில் இருந்து ஊர்வலமாக வாகனங்களில் எடுத்துச்சென்று, மோகனூர் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யும் நிகழ்ச்சியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்றது. நாமக்கல் மாரியம்மன் கோயில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டு விநாயகர் ஊர்வலத்தை துவக்கி வைத்துப் பேசினார்கள்.

இதன்படி நாமக்கல் நகரில் வைக்கப்பட்ட 15 விநாயகர் சிலைகள் லாரி, டெம்போ, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் மேள தாளங்கள் முழங்க நகருக்குள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் பொதுமக்கள் பலரும், தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.

நாமக்கல்லில் இருந்து மோகனூர் வரை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட விநாயகர் சிலைகள், மோகனூர் காவிரி ஆற்றில் கரைத்து விசர்ஜனம் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் மேற்பார்வையில், ஏடிஎஸ்பி விஜயராகவன் தலைமையில் 300 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top