Close
ஏப்ரல் 23, 2026 8:18 மணி

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற, 6 சட்டசபை தொகுதி தேர்தலில் பணிபுரியும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சியில் கலெக்டர் துர்கா மூர்த்தி பேசினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 176 மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள், மண்டல அலுவலர்கள், மண்டல துணை அலுவலர்களுக்கு, 85 வயதினைக் கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஆகியோர்களிடம் படிவம் 12டி கொடுத்து, அவர்களின் வீட்டிற்கே சென்று வாக்குப்பதிவு செய்யும் முறைகுறித்தும், வாக்குசாவடி அலுவலர்கள் தேர்தல் நாளுக்கு முந்தைய நாள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், தேர்தல் நாளன்று காலை முதல் மாலைவரை மேற்கொள்ளவேண்டிய பணிகள், வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளுதல் மற்றும் சம்பந்தப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்தல் குறித்த நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில், 6 சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலரின் மேற்பார்வையாளர்களுக்கு படிவம் 12டி விநியோகம் செய்வது தொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் டிஆர்ஓக்கள் சரவணன், கண்ணன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top