Close
ஆகஸ்ட் 4, 2026 7:20 மணி

தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: அமைச்சர்கள் ஷாஜஹான், ராஜீவ் பங்கேற்பு

முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் ஒன்பதாவது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியரும் சங்கத்தின் தலைவருமான ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட சிறுபான்மை நலத்துறையின் அலுவலர், முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் பொருளாளர் சண்முக சுந்தர் வரவேற்புரை ஆற்றினார், சங்கத்தின் கவுரவச் செயலாளர் ரவணை. முகம்மது ஸலீம், தனது விளக்க உரையில் இதுவரையில் இச்சங்கத்தின் நிதி மற்றும் அரசின் நிதி உதவியுடன் 1365 பயனாளிகளுக்கு ரூ.1,23,10,701 மதிப்பில்,760 பயனாளிகளுக்கு மின் இயந்திரம் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம்,368 பயனாளிகளுக்கு தொழில் உதவி,125 பயனாளிகளுக்கு கல்வி உதவி,63 பயனாளிகளுக்கு மாவாட்டும் இயந்திரம், 4 பயனாளிகளுக்கு தனி தொழில் உதவி, 45, பயனாளிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி இந்த சங்கத்தின் மூலமாக வழங்கப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை கூறினார்.

கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், பிரபல இசை அமைப்பாளர் கலைமாமணி ரமணி பரத்வாஜ் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட ஆட்சியர் தனது தலைமை உரையில் சிறுபான்மையினருக்கு இருக்கின்ற நலத்திட்டங்களை பற்றி விவரமாக எடுத்துரைத்தார்

ரூ.11,74,500, மதிப்பில் மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் -57, மாவாட்டும் இயந்திரம் -11, கல்வி உதவித்தொகை -7 தொழில் உதவி-54 என மொத்தமாக 129 பயனாளிகளுக்கு வழங்கி மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை துறை அமைச்சர் ஷாஜஹான் கூறுகையில், தென்காசி மாவட்டத்திற்கு இன்னும் ஓர் முஸ்லிம் மகளிர் சங்கமும் கிறிஸ்தவ மகளிர் சங்கமும் அமைப்பதற்கு அரசிடம் பரிந்துரை செய்திருப்பதாகவும், இந்த சங்கங்களுக்கு அரசு வழங்குகின்ற ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தை ஒன்றுக்கு மூன்று என்று மாற்றித் தரவும் பரிந்துரை செய்திருப்பதாக தெரிவித்தார்

அமைச்சர் ராஜீவ் அரசின் நலத்திட்டங்கள் பற்றி விளக்கம் அளித்தார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீராசாமி, மாவட்ட இணை திட்ட இயக்குனர் துணைத் தலைவர் முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் தண்டபாணி, மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் முகம்மது இஸ்மாயில், முஸ்லிம் லீக்மாநில துணை செயலாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் அப்துல்அஜீஸ், முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் செய்யது பட்டாணி, முஹம்மது இஸ்மாயில், முஹம்மது அல் அமீன், செய்யது அபுதாஹிர், ஹனிபா, த.வெ.க மாவட்ட செயலாளர் நியாஸ், கடையநல்லூர் நண்பர்கள் குழு, முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் உறுப்பினர்கள் பக்கீர் மைதீன், அலி சேக் மன்சூர், முகைதீன் காசிம் இர்ஷாத் முன்னா முஹம்மத், முகம்மது கனி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்,

டாக்டர். அப்துல் அஜீஸ், முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் கௌரவ இன செயலாளர் நன்றி கூறினார். நிகழ்ச்சியை புகாரி மீரா சாஹிப் தொகுத்து வழங்கினார். நாட்டுப்பண் உடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top