Close
ஆகஸ்ட் 3, 2026 7:06 மணி

காங்கிரஸ் நிர்வாகி வீட்டுக்கு தீ வைத்தவர்களை விரைவாக கைது செய்ய மாவட்ட காங். தலைவர் கோரிக்கை

நாமகிரிப்பேட்டை அருகே மர்ம நபர்களால், வீடு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி கஸ்தூரி சவுந்திரராஜனுக்கு, கிழக்கு மாவட்ட காங். தலைவர் டாக்டர் செந்தில் நிதி உதவி வழங்கினார்.

நாமகிரிப்பேட்டை அருகே காங்கிரஸ் பிரமுகர் வீட்டிற்கு தீ வைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வடுகமுனியம்பாளையம் கிராமத்தில் வசிக்கும் காங்கிரஸ் நிர்வாகி கஸ்தூரி சவுந்திரராஜனுக்கு சொந்தமான வீடு சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் செந்தில் அங்கு நேரில் சென்று தீயில் எரிந்த வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அவர்களின் உடனடி தேவைகளுக்காக நிதியுதவி வழங்கினார்.

தொடர்ந்து நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்று போலீஸ் அதிகாரிகளை சந்தித்த அவர், தீ வைப்பு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், இச்சம்பவத்தில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் விரைந்து நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பையும், நீதியையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாமகிரிப்பேட்டை வட்டாரத் தலைவர் இளங்கோ, ஹுசைன் பாய், ராஜேந்திரன், வக்கீல் ராஜ்குமார், இளைஞர் காங்கிரஸ் அருள் உள்ளிட்ட திரளான காங்கிரசார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top