Close
ஏப்ரல் 23, 2026 11:34 மணி

அலங்காநல்லூர் அருகே, முத்தாலம்மன் கோவில் மண்டலபிஷேக விழா

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குறவன் குளம் கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் பகவதி அம்மன் கழுவடியான் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்ததை ஒட்டி, 48 ஆம் நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது.

யாகசாலை பூஜையில், வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில், சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, குறவன்குளம் விழா கமிட்டியினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top