Close
ஜூன் 12, 2026 1:37 காலை

புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆணையாளர் கௌரவ் குமார், ஆய்வு.

மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், எம்.ஜிஆர்.பேருந்து நிலையம் புனரமைப்பு பணிகள், மாட்டுத்தாவணி மீன்மார்க்கெட் அருகில்  தூய்மை பணியாளர்களுக்கு உணவுகள் தயாரிக்கும் உணவுக்கூடம், மாட்டுத்தாவணி அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள வெங்காய மார்க்கெட் கடைகள் மற்றும் மொத்த காய்கறி அங்காடி, பழ மார்க்கெட் ஆகிய பகுதிகளில்  ஆணையாளர்  கௌரவ் குமார்,   நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.33 மாட்டுத்தாவணி அருகில் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியின் கீழ்  ரூ.6 கோடி மதிப்பீட்டில் 4 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட புதிய கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாட்டுத்தாவணி மீன்மார்க்கெட் அருகில் உள்ள மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு தயாரிக்கும் கூடத்தையும்,  அங்கு உணவுகள் தயார் செய்யப்படுவதையும்  பார்வையிட்டார்.
தொடர்ந்து ,மாட்டுத்தாவணி எம்.ஜிஆர்.பேருந்து நிலையத்தில் ரூ.15.50 கோடி மதிப்பீட்டில் நடைபாதைகள், பேருந்து நிறுத்தம், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி, மின்விளக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் மற்றும் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள பொது கழிப்பறைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தொடர்ந்து பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மாட்டுத்தாவணி அருகில் ரூ.10.30 கோடி மதிப்பீட்டில் வெங்காய மார்க்கெட் அமைப்பதற்கு புதிதாக 75 கடைகள் கட்டப்பட உள்ளது. முதற்கட்டமாக 42 கடைகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது கட்டிமுடிக்கப் பட்ட கடைகள் மற்றும் கட்டப்பட உள்ள கடைகளின் கட்டுமான பணிகள் குறித்தும் ஆணையாளர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாட்டுத்தாவணி அருகில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட் மற்றும் மொத்த பழ மார்க்கெட்டிற்கு உள்ளே வரும் வாகனங்களுக்கு மாநகராட்சி நிர்ணயம் செய்யப்பட்ட நுழைவுக்கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா, நுழைவுக் கட்டண இரசீது வழங்கப்படுகிறதா  என்பதும்   குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது , தலைமை பொறியாளர் பாபு, மாநகர் நல அலுவலர் மரு.அர்விந்த் ஜோதி, உதவி ஆணையாளர் ரவிக்குமார், உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் காமராஜ், உதவிப்பொறியாளர் சந்தனம், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன்,  சுகாதார ஆய்வாளர் கவிதா  உட்பட  மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top