Close
ஆகஸ்ட் 4, 2026 7:57 மணி

உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து தென்காசியில் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், த.வெ.க. அரசையும், அதற்கு உறுதுணையாக செயல்படும் காவல்துறையின் நடவடிக்கையையும் கண்டித்தும் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். அறவழியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கைது நடவடிக்கையை கண்டித்தும், ஜனநாயக உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தி.மு.க.வினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளர் ஜெயபாலன், ஜனநாயக வழியில் போராடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததன் மூலம் உரிமைக் குரலை ஒடுக்க முடியாது. இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கு தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது . அநீதி வீழும்; அறம் வெல்லும் என்ற முழக்கத்துடன் போராட்டம் தொடரும் எனக் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர்.

இப்போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், கிளைக் கழக நிர்வாகிகள், மாவட்ட மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top