Close
ஏப்ரல் 23, 2026 9:54 மணி

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் வேலு அறிவிப்பு

அமைச்சர் வேலு

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது அதில் செங்கம், கீழ்பெண்ணாத்தூர், ஆரணி, கலசப்பாக்கம், செய்யாறு, வந்தவாசி சட்டப்பேரவை தொகுதிகள் திமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

திருவண்ணாமலை, காந்தி சிலை அருகில், திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை அறிவித்தை தொடர்ந்து, கழக நிர்வாகிகளும், தோழர்களும் பொ துமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

மாநகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கன், பகுதி பொறுப்பாளர்கள் விஜி (எ)விஜியராஜ், சண்முகம், சீனுவாசன், மாவட்ட அமைப்பாளர்கள் டி.வி. எம்.நேரு, காலேஜ் ரவி, ஏ.ஏ.ஆறுமுகம், துணை மேயர் .ராஜாங்கம் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட கண்ணமங்கலம் பேரூராட்சி மகாலட்சுமி கோவர்த்தனனை கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டது . இதனை தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் ஆரணி அண்ணா சிலை அருகே பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

கீழ்பென்னாத்தூர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு மீண்டும் திமுக வேட்பாளராக துணை சபாநாயகர் பிச்சாண்டி அறிவிக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சோமாசிபாடி பேருந்து நிலையத்தில் ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம் தலைமையில், பட்டாசு வெடித்து இனிப்புகளை கட்சியினர், தொண்டர்கள் மற்றும் பொது மக்களுக்கு அவர் வழங்கினார்.

கலசபாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதியில் திமுக சார்பில் திமுக வேட்பாளர் பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏவை மீண்டும் 2வது முறையாக வேட்பாளராக அறிவித்ததால் பொதுமக்களுக்கு பல்வேறு இடங்களில் இனிப்புகளை வழங்கி பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர். கலசபாக்கம், கடலாடி, மாதிமங்கலம், காரப்பட்டு, புதுப்பாளையம் பேரூராட்சி, பழங்கோயில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகில், வந்தவாசி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அம்பேத்குமார் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நகர திமுக செயலாளர் தயாளன் தலைமையில் திமுக வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வாக்கு சேகரிப்பை தொடங்கினர்.

பின்னர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அம்பேத்குமார் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேரடி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

செங்கம்

செங்கம் தனி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்று கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதியாக பணியாற்றி வரும் எம்.எல்.ஏ மு.பெ.கிரிக்கு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட தமிழக முதல்வர் ஸ்டாலின் வாய்ப்பளித்து அறிவிப்பு வெளி யிட்டுள்ளார் .

இதனைத் தொடர்ந்து, செங்கம் சட்டமன்ற தொகுதி முழுவதும் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர். நகர மன்ற தலைவர் சாதிக்பாஷா, பிரபாகரன், ஒன்றிய செயலாளர் சிவசேமன் உள்ளிட்டோர்,  . செங்கம் புதிய பேருந்து நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், போளூர், குப்பநத்தம் மற்றும் செங்கம் மும்முனை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும், “மூன்றாவது முறையும் வெற்றி பெற வாழ்த்துகள்” என முழக்கங்கள் எழுப்பி தங்களது தொடர்ந்த ஆதரவை தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top