Close
மே 26, 2026 10:07 மணி

காலி பாட்டில் திருப்பி வாங்கும் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க்க கோரி, நாமக்கல் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு, டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலி மது பாட்டில்களை திருப்பி வாங்கும் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்க வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், டாஸ்மாக் குடோன் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் குடிமகன்கள் பாதிக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில், 169 டாஸ்மாக் கடைகள் இருந்தன. அவற்றில், த.வெ.க., தலைமையிலான தமிழக அரசு, கோயில்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகில், 500 மீ.,ருக்குள் இருக்கும் டாஸ்மாக் கடைகளை கணக்கெடுத்து, மாநிலம் முழுவதும் 717 கடைகள், இரண்டு வாரங்களுக்கும் மூடவேண்டும் என உத்தரவிட்டது.

அதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம், 10 கடைகள் மூடப்பட்டதால், தற்போது, கடைகளின் எண்ணிக்கை 159ஆக குறைந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த தி.மு.க., ஆட்சியில், விற்பனையை விலையைவிட கூடுதலாக, ஒரு மது பாட்டிலுக்கு ரூ. 10 வீதம் வசூலித்து, திரும்ப அவற்றை கொண்டுவந்து ஓப்படைவருக்கு ரூ. 10 திருப்பி வழங்கும் பணி நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கு, டாஸ்மாக் பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல், தொடர்ந்து காலி பாட்டிலை திரும்ப பெரும் திட்டத்திற்கு, டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அத்திட்டத்தை, தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காலி பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தை, தனியார் வசம் ஒப்படைக்க வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், டாஸ்மாக் குடோனில் ரூ. 10க்கான ஸ்டிக்கரை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, காலி பாட்டில்களை டாஸ்மாக் ஊழியர்கள் திரும்ப பெறமாட்டோம். கேரளா அரசு போல், மதுபான ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளம் மற்றும் அனைத்து சலுகைகளையும் தமிழக அரசு எங்களுக்கு வழங்க வேண்டும். டாஸ்மாக் நிரந்தரம் என்றால், அதில் பணியாற்றும் ஊழியர்களையும் நிரந்தரப்படுத்தி, அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

டாஸ்மாக் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மாவட்டத்தில், 159 கடைகள் நேற்று மூடப்படது. மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால், மது பாட்டில்கள் வாங்க முடியாமல் குடிமகன்கள் பாதிக்கப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top