Close
ஜூன் 12, 2026 12:12 காலை

ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்த புகார்களை தெரிவிக்க அலுவலர்கள் நியமனம்

மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்த புகார்களை தெரிவிக்க அலுவலர் நியமிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:  சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையரின் ஆணையின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ்  பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு  குறைதீர்வு அலுவலராக ஜி.கலைச்செல்வி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் சார்ந்த  குறைகளை தெரிவிக்க பொதுமக்கள் மாவட்ட குறைதீர்வு அலுவலரை  திருவண்ணாமலை   மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் நேரிலோ, 8925811341 என்ற அலைபேசி எண்ணிலோ அல்லது  tiruvannamalaiombudsperson@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top