Close
ஜூலை 3, 2026 11:07 மணி

நாமக்கல்லில் கவுன்சலிங் நிகழ்ச்சியில் பரபரப்பு: தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம்

கொண்டிசெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுப்பள்ளியில் நடைபெற்ற கவுன்சலிங்கை புறக்கணித்து வெளியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்.

நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியில் நடைபெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர் கவுன்சலிங்கை ஆசிரியர்கள் புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் தொடர்பான கவுன்சலிங் நடைபெற்றது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பச்சமுத்து தலைமை வகித்தார்.

அப்போது தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் (டிட்டோ ஜாக்) ஜூன் 3–ல் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு உத்தரவுகள் வழங்க வேண்டும். அதன்பின் உபரி ஆசிரியர் பணியிட நிரவலை எவ்வித குறைபாடுகளுமின்றி நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும் மேற்குறிப்பிட்ட எங்களது கோரிக்கை ஏற்றுக் கொண்டார் எனவும் தெரிவித்தனர். எனினும், ஜூன் 30-ல் பணி நிறைவு பெற்ற பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு உத்தரவு வழங்குவது தொடர்பாக தனக்கு எவ்வித தகவலும் வரவில்லை என டிட்டோஜாக் நிர்வாகிகளிடம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பச்சமுத்து தெரிவித்தார்.

இதை ஏற்க மறுத்த இடைநிலை ஆசிரியர்கள் கவுன்சலிங்கில் பங்கேற்காமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே மதியம் 2 மணிக்குப் பின் ஜூன் 30-ல் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நீடிப்பு உத்தரவுகள் வழங்கப்பட்டது. பின்னர் காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. மீதமுள்ள காலிப் பணியிடங்கள் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் கவுன்சலிங்கின்போது நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top