Close
ஜூலை 13, 2026 12:00 காலை

மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையான மாநில அளவிலான தடகள போட்டி

வேலம்மாள் குளோபல் பள்ளியில், தமிழ்நாடு தடகள சம்மேளனம் சார்பில் 2026 முதல்முறையாக பள்ளிகளுக்கிடையேயான தடகள சாம்பியன்ஷிப் போட்டி இரண்டு நாள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில், தமிழகம் முழுவதும் 150 பள்ளிகளிலிருந்து 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மதுரை சிந்தாமணியில் உள்ள வேலம்மாள் குளோபல் பள்ளியில் மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டி வருகிற 24 , 25 ஆகிய இரண்டு நாட்கள் வேலம்மாள் குளோபல் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

வேலம்மாள் குளோபல் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட செயற்கை ஓடுதளத்தில் இப்போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த இரண்டு நாள் போட்டியானது, இளம் தடகள வீரர்களுக்குத் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், மதிப்புமிக்க போட்டி அனுபவத்தைப் பெறவும், சிறந்து விளங்கவும் ஒரு தொழில்முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தளத்தை வழங்குவதன் மூலம், அடித்தள தடகளத்தை வலுப்படுத்தும் ஒரு மைல்கல் முயற்சியாகவும் பள்ளி அளவில் நம்பிக்கைக்குரிய இளம் விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து, அவர்களின் திறமையை வளர்த்து கொள்ள உதவும்.

இந்தியாவிற்கு ஒலிம்பிக் பெருமையைக் கொண்டு வரக்கூடிய எதிர்கால சாம்பியன்களை உருவாக்குதல் என்ற நீண்டகால தொலைநோக்குப் பார்வையால் இந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் இயக்கப்படுகிறது.

இதில், தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 150-க்கும் மேற்பட்ட பள்ளிகளையும், 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 4 பிரிவுகளில் (10, 12, 14 மற்றும் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்/சிறுமிகள்) 76 போட்டிகளில் விளையாடடுவார்கள்.

இது மாநிலத்தின் மிகப்பெரிய அளவுலான பள்ளிகளுக்கிடையே நடைபெறும் தடகள சாம்பியன்ஷிப் போட்டி இதுவாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top