Close
ஜூலை 12, 2026 11:59 மணி

இல்லம்தேடி ரேஷன் பொருள் திட்டத்தில் விடுபட்டவர்களையும் சேர்க்க கோரிக்கை

இல்லம்தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தில், விடுபட்டுள்ள 70 வயது பூர்த்தியானவர்களையும் சேர்க்க வேண்டும் என நுகர்வோர் புலனாய்வு கமிட்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு நுகர்வோர், மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி மாவட்ட செயலாளர் பொன்னுசாமி மற்றும் நிர்வாகிகள், நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பொருட்கள் வாங்கும்போது பச்சரிசி வாங்கும்படி கட்டாயபடுத்தாமல் நுகர்வோர் விரும்பும் அரிசியை வழங்க வேண்டும். ரேஷன் பொருட்கள் அல்லாது சோப்பு, டீதூள் போன்ற மளிகை பொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்தக்டுத்தக் கூடாது. நுகர்வோர் விரும்பி வாங்கும் மளிகை பொருட்களுக்கு தனியாக பில் கொடுக்க வேண்டும்.

இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் விடுபட்டுள்ள 70 வயது பூர்த்தியானவர்களையும் சேர்க்க வேண்டும். முதியோர்களில் பலருக்கு பயோ மெட்ரிக் முறையில் ரேகை விழுவதில்லை. இதனால் அவர்களுக்கு ரேஷன் கடை பணியாளர்கள் பொருட்கள் வழங்க மறுக்கின்றனர்.

எனவே 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரேகை பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். நாமக்கல் மாநகராட்சி மற்றும் ஊரக பகுதி பஸ் ஸ்டாப்புகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை பயணிகள் உட்காரும் வகையில் முறையாக பராமரிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top