தென்னிந்திய அளவில் 10 வயதுக்கு குறைவான மகளிர் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நாமக்கல்லில் நடைபெற்றது.
நாமக்கல்லில் செயல்பட்டு வரும் லா ஜெனஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற முகாமிற்கு அதன் நிறுவனர் ஜெகதீசன் தலைமை வகித்தார். பயிற்சியாளர் நவீன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாணவிகளுக்கு உடற்தகுதி மேம்பாடு, கால்பந்து நுணுக்கங்கள், அணிசேர்க்கை திறன், ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் போட்டி மனப்பான்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பயிற்சி அளித்தார்.
நிகழ்ச்சியில் நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி சேர்மன் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். தன்னம்பிக்கை பேச்சாளர் ஆடிட்டர் ராகவி, மாணவிகளிடம் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, இலக்கை நோக்கிய பயிற்சி மற்றும் விளையாட்டு ஒழுக்கம் குறித்து பேசினார்.
சிறப்பாக விளையாடிய மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. முகாமில் பங்கேற்ற வீராங்கனைகள் விரைவில் நடைபெற உள்ள, தென்னிந்திய அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி சாதனை படைக்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.




